எதிர்கால திட்டங்கள்
வரும் காலத்தில் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் நிறுவி, 1000 ஊழியர்களுக்கும் மேலாக உயர்த்தும் கனவை கண்டு வருகிறோம். நாங்கள் எங்கள் விரிவாக்க செயல்பாடுகளை வருடா வருடம் தொடர்ந்து செய்வோம், மேலும் நாங்கள் பணி புரியும் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் அனைவரும் எங்கள் வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் நிறுவனத்தையே தெரிவு செய்யும் அளவுக்கு உயரும் நோக்குடன் செயல் புரிவோம்.
மேலும் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து, புதியதாக நிறுவப்பட்டுள்ள "தேசிக்ரூ பௌண்டேசன்" என்ற அமைப்பு மூலமாக எங்கள் சேவைகளுக்கான எல்லைகளை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த தேசிக்ரூ பௌண்டேசன் என்ற புதிய அமைப்பு, சமூக தாக்கவிளைவு மதிப்பீடு, கிராமீய முன்வடிவு வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் (பிபிஒ) க்களை சந்தைப்படுத்துதல், பங்குகளை-பகிர்தல் மற்றும் ஊழியர்களுக்கு ஆதாயங்களை வழங்குதல், மற்றும் சமூக சேவை நிகழ்வுகள் போன்ற செயல்பாடுகளுக்கு நிதி உதவி வழங்கி உதவி புரியும்.

