காப்பீட்டுத்துறை
முன்னதாக 2000 ஆண்டுகளில் காப்பீட்ட்டுத்துறையை தாராளமயமாக்கிய நாளில் இருந்து, இத்துறை மிக விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுனர்கள் இத்துறையில் நுழைந்து ஆயுள் காப்பீடு, உடல் நலம் மற்றும் பொதுவான காப்பீடுகள் வழங்க முன்வந்துள்ளதால், இத்துறையில் ஆரோக்கியமான போட்டியுடன் கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் இப்பொழுது காப்புறுதி என்பது கூட ஒரு பொருளைப் போன்ற தகுதியைப் பெற்று மக்கள் அவற்றிலும் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் பல வகைப்பட்ட நூதனமான காப்பீடு முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர், மேலும் நகரங்களில் கவனம் செலுத்துவதோடு, சிறிய ஊர்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களையும் கவரும் வகையிலான திட்டங்களை செயல் படுத்தி, தமது செயல்முறைகளை விரிவு படுத்தி, ஒழுங்கு படுத்த விழைகின்றனர்.
கடுமையான போட்டி மற்றும் குறைந்த அளவு இலாபம் போன்ற சூழ்நிலைகளில் இது போன்ற பணிகளை வெளியார்க்கு வழங்குவதில் செலவுகளை குறைக்க வழியுண்டாகும். எங்கள் சிறப்புமிக்க பின் அலுவலக காப்புறுதி சேவைகள் செலவுகளை குறைக்க வழிவகுப்பதோடு, இத்தொழிலில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளையும் சிக்கனமான முறையில் சமாளிக்கும் நிருவாகத் திறமையையும் வளர்க்கும். தேசிக்ரூ சேவைகள் மூலம் பணியாற்றுவதால், கிராமத்தில் அமைந்திருக்கும் பயனீட்டாளர்களும் நல்ல வருவாய் பெற்று அதனால் மேலும் புதிய காப்பீட்டுத் திட்டங்களை வழங்க ஏதுவாகும்.
மேலும் தேசிக்ரூ குழுவினர் மூலமாக பகுதி நகரம் மற்றும் கிராமப் புற பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களையும் அடைய வழி வகுக்கும். எங்களுடைய கிராமப்புற சேவைகள் நல்கும் முன்வடிவு செயலாக்கம் புதிய வாடிக்கையாளர்களை அடையவும், பரம்பரையாக இதில் நாட்டம் கொண்டவர்களை இதில் ஈடுபடுத்தவும் வழிவகுப்பதாகும்
நாங்கள் வழங்கும் காப்புறுதி பிரிவு சேவைகள்
எண்முறைப்படுத்தல் - வரியோட்டம் மற்றும் தரவுப் பதிவிடல்
எண்முறைப்படுத்தல் வழிமுறைகளில் தேசிக்ரூவினர் தம் திறமையை நன்கு வளர்த்துள்ளனர், அதனால் மின்னணுவியல் ஆவணங்களை முறைப்படி தொகுத்து, சீர்படுத்தி வடிவூட்டுதல், வரிசைப்படுத்தல், மற்றும் ஒழுங்குபடுத்தி அவற்றை எளிதாக தேடும் வகையிலான தகவல் சொத்துக்களாக மாற்றவும், பாதுகாக்கவும் இயலும். எங்கள் குழுவினர் அதிக அளவிலான தரவுகளை குறைந்த நேரத்தில் எண்முறைப்படுத்தி அவற்றை நிர்வாகிக்கும் திறமையை வளர்த்த அனுபவம் கொண்டவர்களாகும்.
வழக்கு ஆய்வினைக் காணவும்புதிய வணிகம் தொடங்குதல்
ஒரு காப்புறுதி நிறுவனத்தின் விண்ணப்ப படிவம் மற்றும் அதனுடன் இணைப்புகள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து முறையாக இருப்பதை சரி பார்ப்பதில் இருந்து, புதிய கருத்துருக்களை தரவுப் பதிவிடல் வரையிலான அனைத்து முறைமைகளிலும் ஒரு தளப்பக்கத்தின் கருவி மூலமாக சோதித்துப் பார்க்கும் வரையிலான அனைத்து செய்முறைகளிலும் தேர்ச்சி பெற்று தேசிக்ரூவின் குழுவினர் இரு முறைமைகளிலும் சரியாக அமைந்த செய்முறைகளை செயல்படுத்தும் திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளனர். மிகவும் முக்கியமாக இது போன்ற வணிகங்களில் சந்தைப்படுத்தும் தேவைகள் மாறிக்கொண்டே இருப்பதன் விளைவுகளையும் நன்கு புரிந்து கொண்டிருப்பதால், இக்குழுவினர் இது போன்ற சேவைகளை தேவைக்கேற்ப வழங்க தயாராக உள்ளனர். மேலும் நாங்கள் கடந்த 2.5 வருடங்களாக சேகரித்து வைத்துள்ள தரவுகளில் இருந்து, இது போன்ற மாறிக்கொண்டே இருக்கும் தேவைகள் கொண்ட ஒரு அமைப்பை நிர்வாகம் செய்ய, தேசிக்ரூவினரின் கிராமத்தை சார்ந்த விநியோக முன்வடிவம் மேலும் விலை பயன்திறன் கொண்டதாகும்.
வழக்கு ஆய்வினைக் காணவும்அஞ்சல் அறை செயல்பாடுகள்
தமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதற்காக, பல நிறுவனங்கள் தபால் மற்றும் தனியார் விரைவு அஞ்சல் சேவைகளை சார்ந்து இருக்கின்றன. இதற்கு தகுந்தாற்போல் தேசிக்ரூவின் அஞ்சல் அறை நிர்வாக செயல்பாடுகள் உள்நோக்கி வரும் அஞ்சல் அறை மற்றும் வெளியே செல்லும் அஞ்சல் அறைகளை நிறுவ உதவுகின்றன. உள்நோக்கி வரும் அஞ்சல் அறையில் அஞ்சல்களைப் பெற்று, திறந்த பின் அவை பிரிக்கப் படுகின்றன. வெளி நோக்கி செல்லும் அஞ்சல் அறையில் ஆவணங்கள் அச்சிட்டு பிறகு அனுப்பப் படுகின்றன.

